ஒருவர் வேட்புமனு தாக்கல்


ஒருவர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 18 Sep 2021 7:51 PM GMT (Updated: 18 Sep 2021 7:51 PM GMT)

தற்செயல் தேர்தலுக்கு ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பெரம்பலூர்:

தற்செயல் தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
5 பேர் வேட்பு மனு தாக்கல்
இந்நிலையில் நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உட்கோட்டை ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரம்பலூரில் ஒருவர்
கடந்த 3 நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில், நேற்று வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 22-ந்தேதி கடைசி நாளாகும்.

Next Story