போக்சோ சட்டத்தில் கைது


போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Sep 2021 4:19 PM GMT (Updated: 19 Sep 2021 4:19 PM GMT)

போக்சோ சட்டத்தில் கைது

பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ்(வயது 24), இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அதே பகுதியில் இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு வந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்தச்சிறுமியிடம், இதை வெளியில் சொன்னால், கொன்றுவிடுவேன் என மிரட்டியதால் சிறுமி, யாரிடமும் சொல்லவில்லை. ஊருக்கு சென்ற பிறகு சிறுமி சோர்ந்து காணப்படுவதை கண்டு அவரது தாயார் கேட்டபோது நடந்த சம்பவத்தைப்பற்றி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி அப்பாசை கைது செய்தனர்.

Next Story