அறந்தாங்கியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலையா? வருவாய் கோட்டாட்சியர் விசாரணை


அறந்தாங்கியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலையா? வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
x
தினத்தந்தி 19 Sep 2021 6:53 PM GMT (Updated: 19 Sep 2021 6:53 PM GMT)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே அரையப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மனைவி ரேவதி (36). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரேவதி தந்தை நல்லதம்பி, தனது மகள் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் பளுவான்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த ரேவதியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் நல்லதம்பி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்த போது மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் ரேவதி என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் ரேவதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கி விட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேவதிக்கு திருமணாகி 5 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story