இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sep 2021 6:58 PM GMT (Updated: 19 Sep 2021 6:58 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை குறித்து விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதிஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சமையன், மாநிலச்செயலாளர் மாரியப்பன் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story