கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது கூட்டாளிகள் 3 பேரும் சிக்கினர்


கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது கூட்டாளிகள் 3 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Sep 2021 1:01 PM GMT (Updated: 20 Sep 2021 1:01 PM GMT)

கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவி கடத்தல்
கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவருக்கும் பிளஸ்-2 படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அந்த மாணவியை கார்த்திக் கடத்திச்சென்றார். 
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வாலிபரிடம் இருந்து அந்த மாணவியை மீட்டனர்.
போக்சோ சட்டத்தில் கைது
அவரை கடத்திய கார்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மகாராஜா (வயது 23), செண்பகராஜ் (வயது 27), மாரிமுத்து ( வயது 19) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் பள்ளி மாணவியை கடத்திய கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


Next Story