முளைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


முளைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2021 11:32 AM GMT (Updated: 21 Sep 2021 11:32 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் முறைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் முறைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். 
முளைப்புத்திறன் பரிசோதனை
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் முளைப்புத்திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விதைகள் வினியோகம் செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளை வினியோகஸ்தர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது விதை குவியலுக்குரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டும். 
விதை விற்பனையாளர்கள் மேற்படி பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்படாத நிலையில் அந்த விதைக்குவியலில் இருந்து பணி விதை மாதிரிகளை எடுத்து அதை விதைப்பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்து பகுப்பாய்வு முடிவுகள் பெற்ற பின்னரே அதன் அடிப்படையில் உண்மை நிலை விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும்போது முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்றுக்கொள்ள வேண்டும். விவர அட்டையில் 14 விவரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டை சிப்பங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
தாராபுரம் பகுதியில் உள்ள விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும் முன் முளைப்புத்திறனை உறுதி செய்து அதன் அடிப்படையில் விதைகள் வினியோகம் செய்ய வேண்டும். முறைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

Next Story