2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா


2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sep 2021 6:33 PM GMT (Updated: 21 Sep 2021 6:33 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது

2 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 1&ந்தேதி முதல் 9&ம் வகுப்பு முதல் 12&ம் வரையிலான மாணவ&மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகளும் 1&ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவ&மாணவிகளுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆசிரியர்கள், 4 பள்ளி மாணவர்கள், 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் 11 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story