புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவுக்கு 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story