கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ் 1 மாணவி


கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ் 1 மாணவி
x
தினத்தந்தி 21 Sep 2021 7:48 PM GMT (Updated: 21 Sep 2021 7:48 PM GMT)

கரூர் அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் தீபிகா (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து கிணறு அருகே ஆடுகளை மேய்ச்சலை விட்டிருந்தார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி அவர் இறந்து விட்டார். அருகில் உள்ளவர்கள் இதனை பார்த்து வாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் தவறி விழுந்ததால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story