இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Sep 2021 9:49 PM GMT (Updated: 21 Sep 2021 9:49 PM GMT)

முனைஞ்சிப்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பதைக்கம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அமராவதி. இவர்களுடைய மகள் சவுந்தர்யா (வயது 16). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் மில்லுக்கு தினமும் ஒரு வேனில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, சவுந்தர்யா திடீரென்று துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சவுந்தர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story