பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Sep 2021 7:58 PM GMT (Updated: 23 Sep 2021 7:58 PM GMT)

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கல்லடி தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி(வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). ராஜகுமாரியின் மகன் ராஜ்குமார் என்பவர் பாலகிருஷ்ணனின் வீட்டில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராஜகுமாரியிடம், பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், ராஜகுமாரிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் பாலகிருஷ்ணன் ராஜகுமாரியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜகுமாரி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story