நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா ஒருவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா ஒருவர் பலி
x
தினத்தந்தி 24 Sep 2021 4:30 PM GMT (Updated: 24 Sep 2021 4:34 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஒருவர் பலியானார்

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 50,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 6 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 

அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,210 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 72 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,282 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 54 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

இதனிடையே நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானதால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்தது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 49,247 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 551 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story