தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2021 12:39 PM GMT (Updated: 26 Sep 2021 12:39 PM GMT)

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம் 
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 58. இவரது மனைவி பானுமதி 55. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story