மின்சாரம் தாக்கி டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 27 Sep 2021 6:01 PM GMT (Updated: 27 Sep 2021 6:01 PM GMT)

மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.

காளையார்கோவில், 
காளையார்கோவில் அருகே ஒத்தபுஞ்சை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் டிராக்டர் ஒன்று உழுது கொண்டு இருந்தது. அப்போது புதைக்கப்பட்டு இருந்த கேபிளை டிராக்டரின் கொழு வெட்டியதில் மின்சாரம் கசிந்து மின்சாரம் தாக்கி டிராக்டரை ஓட்டிச்சென்ற பகையஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 49) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story