திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Sep 2021 8:21 PM GMT (Updated: 27 Sep 2021 8:21 PM GMT)

சுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுரண்டை:
சுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

புதுமண தம்பதி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகள் வெயிலுமுத்து (வயது 18).
அதே ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மோகன்ராஜ் (21). கூலி தொழிலாளி. இவருக்கும், வெயிலுமுத்துவுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதி சேர்ந்தமரம் பசும்பொன் நகரில் தனி வீட்டில் வசித்து வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மோகன்ராஜ் வழக்கம்போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டார். அவர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் வெயிலுமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த வெயிலுமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தற்கொலை செய்ததால், தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். சுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story