உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்- தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமையில் நடந்தது


உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்- தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 27 Sep 2021 8:26 PM GMT (Updated: 27 Sep 2021 8:26 PM GMT)

தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம், தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமையில் நடந்தது.

தென்காசி:
தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய சட்டப்படியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் காவல்துறை கவனமாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டு தேர்தல் நேர்மையாகவும், வன்முறைகள் இல்லாமலும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று தேவையான அளவு அதிவிரைவு படைகளை அமைத்து, சட்டம்-ஒழுங்கை பேண வேண்டும் என்றும் தேர்தல் பார்வையாளர் சங்கர் கேட்டுக் கொண்டார்.

கலெக்டர்

மேலும் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை உள்ளன என்றும், கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற வாக்குச்சாவடிகள் எவை என்றும் கேட்டறிந்தார்.
ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story