கலெக்டர் அலுவலக ‘லிப்ட்’டில் சிக்கிய ஊழியர்கள்


கலெக்டர் அலுவலக ‘லிப்ட்’டில் சிக்கிய ஊழியர்கள்
x
தினத்தந்தி 28 Sep 2021 8:52 PM GMT (Updated: 28 Sep 2021 8:52 PM GMT)

கலெக்டர் அலுவலக ‘லிப்ட்’டில் சிக்கிய ஊழியர்கள்

மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகம் தற்போது கூடுதல் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கூடுதல் கட்டிடம் ரூ.39 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. அந்த கட்டிடம் ஒரு தரைத்தளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது. எனவே அங்கு லிப்ட் வசதி இயக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்களான அமுதா மற்றும் மாற்றுத்திறனாளியான பிரபு ஆகிய இருவரும் லிப்ட் மூலம் 2 தளத்திற்கு சென்றனர். அப்போது அந்த லிப்ட் திடீரென பழுதாகி இடையிலேயே நின்று விட்டது. அதனால் செய்வதறியாது தவித்த அவர்கள் கூச்சல் எழுப்பினர். இந்த கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஊழியர்களும், பொதுமக்களும் திரண்டனர். தகவலறிந்த கலெக்டர் அனிஷ் சேகரும் அங்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து லிப்ட் கதவை உடைத்து அங்கு சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டனர்.

Next Story