தீயில் கருகி மூதாட்டி பலி


தீயில் கருகி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 10 Oct 2021 7:46 PM GMT (Updated: 10 Oct 2021 7:46 PM GMT)

ராஜபாளையத்தில் தீயில் கருகி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம் 
ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 95). இவர் வீட்டில் வெந்நீர் சுடவைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அடுப்பில் சேலை விழுந்து தீப்பற்றிக் கொண்டது. அப்போது தீ மள மளவென அவர் உடல் முழுவதும் பரவியதால் பலத்த காயமடைந்தார். கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் சிவகாசியில் உள்ள தீக்காய பிரிவிற்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுப்புலட்சுமியின் மகன் அய்யலுசாமி கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story