தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்


தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 11 Oct 2021 5:44 PM GMT (Updated: 11 Oct 2021 5:44 PM GMT)

தேவகோட்டையில் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

தேவகோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது51) இவர் சென்னையில் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார்.தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் வீதியில் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை 2017-ம் ஆண்டு கிரையம் வாங்கி இருந்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்கும் நோக்கில் ரூ.30 லட்சம் கேட்டு ரவிச்சந்திரனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதே இடத்தில் கல்கால்கள் ஊன்றி கொட்டகை அமைத்ததாகவும், கட்டுமானத்திற்கு இறக்கி வைத்திருந்த பொருட்களை திருடிச் சென்றதாகவும், இதை தட்டிக்கேட்ட என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருதாஊருணி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் செட்டியார்(65) மற்றும் விவேகானந்தபுரம் மகா என்ற மகாலிங்கம்(46) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story