சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Oct 2021 7:09 PM GMT (Updated: 11 Oct 2021 7:09 PM GMT)

மானூர் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

மானூர்:

மானூர் அருகே உள்ள சம்பூத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சலோமி நித்தி (வயது 13) என்ற மகள் உண்டு. செல்வி இறந்து விட்டதால் செல்லத்துரை சின்னத்தாய் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சலோமி நித்தி வீட்டில் வேலை பார்க்காமல், டி.வி. பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை சின்னத்தாய் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சலோமி நித்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story