ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது


ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது
x
தினத்தந்தி 11 Oct 2021 7:37 PM GMT (Updated: 11 Oct 2021 7:37 PM GMT)

ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் தடுமாறிய கார் மின்கம்பத்தில் மோதியது

மலைக்கோட்டை, அக்.12-
பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ஒருவர் நேற்று காலை திருச்சிக்கு வந்தார்.  வெளியூர் சென்ற அவரை திருச்சி ெரயில் நிலையத்தில் விட்டு, விட்டு டிரைவர் சிவக்குமார் (வயது 35) மட்டும் திரும்ப காரில் வந்தார். கார் சத்திரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, திடீரென்று ரோட்டின் குறுக்கே  மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரைத் இடது புறமாக திருப்பினார்.  அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரத்தில் உள்ள இருசக்கர வாகனத்தின் மீது இடித்து, அங்கு உள்ள வணிக வளாகத்தின் படியில் மோதி, பின்னர் மின்கம்பத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story