பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2021 8:15 PM GMT (Updated: 11 Oct 2021 8:15 PM GMT)

திருச்சுழி அருகே பெண்ணிடம் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

காரியாபட்டி, 
 திருச்சுழி அருகே மண்டபசாலை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி சுந்தரேஸ்வரி என்ற சத்யா (வயது 24). இவரும் இவருடைய மாமியார் ராதா மற்றும் 1 வயது குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி சத்யாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story