நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 51,289 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 51,289 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2021 6:15 PM GMT (Updated: 12 Oct 2021 6:15 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,289 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:
53 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 289 ஆக அதிகரித்து உள்ளது.
595 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 58 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 204 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 595 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story