சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 12 Oct 2021 7:10 PM GMT (Updated: 12 Oct 2021 7:10 PM GMT)

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை, 
குளித்தலையை சேர்ந்த 17 வயது சிறுமி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், குளித்தலை கடம்பர் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

Next Story