கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அர்ஜூன் சம்பத் பேட்டி
கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அர்ஜூன் சம்பத் கூறினார்.
கும்பகோணம்:-
மாணவிக்கு பாராட்டு
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. சதி செய்கிறது
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தால் ரூ.30 முதல் ரூ.40 வரை விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வராதபடி தி.மு.க. சதி செய்து வருகிறது.
முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான தங்க நகைகளை உருக்குவது தொடர்பான முடிவுகளை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இணைந்து எடுத்தால் அது பல்வேறு முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். எனவே தமிழக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அறநிலையத்துறையும், அரசியல்வாதிகளும் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.
அவசியமில்லாத ஒன்று
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட செயலாளர் அனபாயன், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக், செயலாளர் சுவாமிநாதன், அமைப்பு செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story