மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 11:49 AM GMT (Updated: 13 Oct 2021 11:49 AM GMT)

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து மழைக்காலங்களில் சாலையில் பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் முறிந்து விழுதல் ஆகிய சம்பவங்கள் நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது.

இதனால் நேற்று காலை 7 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் மற்றும் பர்லியார் இடையே மரம் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த, மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் காலை 8 மணியளவில் போக்குவரத்து தொடங்கியது.


Next Story