தொடர் மழையால் மலர்கள் அழுகின


தொடர் மழையால் மலர்கள் அழுகின
x
தினத்தந்தி 13 Oct 2021 1:31 PM GMT (Updated: 13 Oct 2021 1:31 PM GMT)

தொடர் மழையால் மலர்கள் அழுகின

குன்னூர்

குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு 2-வது சீசனுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. அதில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்கள் அழுகி வருகின்றன. இதனால் அதனை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Next Story