காவேரிப்பட்டணம் அருகே புதுப்பெண் தற்கொலை


காவேரிப்பட்டணம் அருகே புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 Oct 2021 6:00 AM GMT (Updated: 14 Oct 2021 6:00 AM GMT)

காவேரிப்பட்டணம் அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் மஞ்சு (வயது 22). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தில் மஞ்சுவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

Next Story