மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்; 6 பேர் மீது வழக்கு


மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்; 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Oct 2021 6:37 PM GMT (Updated: 15 Oct 2021 6:37 PM GMT)

கறம்பக்குடி, திருப்புனவாசல் பகுதிகளில் மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கறம்பக்குடி, 
ரகசிய தகவல்
கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பகுதியில் அக்னி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் மேல வாண்டான் விடுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டுவண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜன், சுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு வேன்கள் பறிமுதல்
இதேபோல் கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தென்னகர் கொடிமரம் அருகே சென்ற 2 சரக்கு வேன்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காட்டாற்றில் இருந்து மணல் கடத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த சரக்கு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிமுத்து, வினோத் ஆகிய 2 பேர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் தப்பி ஓட்டம்
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்பு ராணி கிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் மினி லாரியில் வந்த டிரைவர் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 
இதையடுத்து, அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்தியபோது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து மணல் கடத்திய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
6 பேர் மீது வழக்கு
திருப்புனவாசல் ஆற்றுப்படுகையில் சிலர் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தார். மேலும், மணல் அள்ளிய ஞானப்பிரகாசம், செல்வராஜ் ஆகியோரை திருப்புனவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கறம்பக்குடி, திருப்புனவாசல் பகுதிகளில் மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள், 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story