நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,506 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,506 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2021 4:56 PM GMT (Updated: 16 Oct 2021 4:56 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,506 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,506 ஆக அதிகரித்து உள்ளது.
46 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 460 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 506 ஆக அதிகரித்து உள்ளது.
595 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 43 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 419 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 492 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 595 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story