விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 16 Oct 2021 7:14 PM GMT (Updated: 16 Oct 2021 7:14 PM GMT)

விவசாயியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

அச்சன்புதூர்:

தென்காசி மாவட்டம் உள்ள சொக்கம்பட்டி அரண்மனை தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 64). விவசாயியான இவருக்கு வைரவன் குளத்தில் சொந்தமாக வயல் உள்ளது. 
இந்த வயலில் வரப்பு பணிகளில் கருத்தப்பாண்டி, அவரது மகன் கார்த்திகேயன் (32) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பக்கத்து வயல் உரிமையாளரான சொக்கம்பட்டி கர்ணம் தெருவைச் சேர்ந்த சந்தன பாண்டியன் (40) என்பவர் வந்தார்.

அப்போது, திடீரென்று அவர்களுக்கு வரப்பு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தன பாண்டியன் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கருத்தப்பாண்டியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை நடத்தி சந்தன பாண்டியனை கைது செய்தார். 

Next Story