கஞ்சா விற்றவர் கைது


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 16 Oct 2021 7:19 PM GMT (Updated: 16 Oct 2021 7:19 PM GMT)

கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் கீழப்புலியூர் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கீழப்புலியூர் டாஸ்மாக்கடை அருகே ஒருவர் கையில் பிளாஸ்டிக் பையுடன் இருந்ததைக் கண்டு அவரைப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், சிறுமத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் குமார்(வயது 42) என்பதும், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் சுமார் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்துக்கொண்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story