சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 1:36 PM GMT (Updated: 17 Oct 2021 1:36 PM GMT)

சாராயம் காய்ச்சியவர் கைது

காங்கேயம்
காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக  காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே  போலீசார் அங்கு சென்று  சோதனை செய்தனர். அப்போது பாப்பினி பகுதியை சேர்ந்த பெரியசாமி வயது 59என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம், 3 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story