நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,557 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,557 ஆக உயர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,557 ஆக உயர்வு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,557 ஆக அதிகரித்து உள்ளது.
51 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 557 ஆக அதிகரித்து உள்ளது.
605 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 41 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 460 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 492 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 605 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story