‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 8:28 PM GMT (Updated: 17 Oct 2021 8:28 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கயிற்றில் கட்டப்பட்ட மின்கம்பம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சிறுகுடி கிராமத்திலுள்ள முஸ்லிம் தெருவில் மின்கம்பம் கீழே சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மின்கம்பத்தை பெரிய வடக்கயிற்றால் கட்டி வைத்து உள்ளனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செண்பக லெட்சுமி, திருச்சி
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
திருச்சி உப்பிலியபுரம் பகுதியிலிருந்து துறையூர் செல்லும் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி இளைஞர்கள் செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்புலெட்சுமி, திருச்சி.
இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
திருச்சி மன்னார்புரம்- பஞ்சப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், இரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி சம்பவம் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சித்ரா, திருச்சி.
பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராம மக்களின் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் ஒழுகிக் கொண்டே உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாரை கொண்டு ஓட்டையை அடைத்துள்ளனர். இருப்பினும் அடிக்கடி தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவி, திருச்சி.
கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியிலிருந்து  ரெயில் நிலையம், புதூர்பாளையம், வானதிரையான்பாளையம், ஆலம்பாக்கம், கோவாண்டகுறிச்சி, வடுகர்பேட்டை பகுதியில் உள்ள சாலைகளில் கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சிங்கிளாந்தபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கத்தாளம்மன் கோவில் தெருவில் தற்போது பெய்த தொடர் மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம்  தென்னூர் அண்ணா நகரில்  ஆயுத பூஜையையொட்டி சேகரிக்கப்பட்ட கழிவு பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story