சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2021 10:21 PM GMT (Updated: 17 Oct 2021 10:21 PM GMT)

சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் விரக்தி அடைந்த பிளஸ்-1 மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், ஆர்.எம்.கே. நகரை சேர்ந்தவர் விஜயன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகள் மாலினி (வயது 16), சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாலினி சரியாக படிக்காததால் அவரது பெற்றோர், அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாலினி, நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நேற்று காலை மாலினியின் அறை கதவு நீண்டநேரம் ஆகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தங்கள் மகள் மாலினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், மாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story