லாரி மோதி தொழிலாளி சாவு


லாரி மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 18 Oct 2021 8:14 PM GMT (Updated: 18 Oct 2021 8:14 PM GMT)

லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி காலனி தெருவைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(வயது 55). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது திருச்சி- சிதம்பரம் சாலையில் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற லாரி, சக்கரவர்த்தி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து சக்கரவர்த்தியின் மனைவி பூங்கொடி அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

Related Tags :
Next Story