சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 8:16 PM GMT (Updated: 18 Oct 2021 8:16 PM GMT)

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னதுரையின் மகன் பிரசாத்(வயது 25). சரக்கு வேன் டிரைவரான இவர் 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதே சிறுமிக்கு ஏற்கனவே சுரேஷ்(28) என்பவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து, பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story