5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது


5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 9:32 PM GMT (Updated: 18 Oct 2021 9:32 PM GMT)

பத்ராவதி அருகே சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்து சென்று 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவமொக்கா: பத்ராவதி அருகே சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்து சென்று 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 5 வயது சிறுமி பலாத்காரம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹரதொளலு கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறாள். கூலித்தொழிலாளிகளான சிறுமியின் பெற்றோர் சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இதையறிந்த அதேகிராமத்தைச் சேர்ந்த வினய்(வயது 20) என்பவர் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அவர், சிறுமியிடம் தன்னுடன் வந்தால் சாக்லெட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது பாக்குத்தோட்டத்தில் உள்ள குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வினய், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும், மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனாலும் சிறுமி, வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கதறி அழுதபடி கூறினாள். 

வாலிபர் கைது

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், வினய் மீது ஒலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியை பலாத்காரம் செய்த வினய்யை கைது செய்தனர். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில், கைதான வினய் ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து வெளியே வந்ததும் தெரியவந்தது. அவர் மீது ஒலேஒன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story