பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு நடந்தது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் கொடிமரம் அருகே உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப் பட்டது. பிறகு சாமி-அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சி அளித்தனர். சாமி-அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்னர் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story