முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2021 7:45 PM GMT (Updated: 19 Oct 2021 7:45 PM GMT)

சேத்தூர் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொைல செய்து கொண்டார்.

தளவாய்புரம், 
சேத்தூர் அருகே சோலைசேரி நாடார் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). இவர் ராஜபாளையத்தில் உள்ள மரக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story