சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி


சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
x
தினத்தந்தி 19 Oct 2021 8:09 PM GMT (Updated: 19 Oct 2021 8:09 PM GMT)

சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் உயிரிழந்தார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஜெமீன் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள புதுத்தெருவை சேர்ந்தவர் செல்வமுத்துக்குமரன்(வயது 42). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ேமலும் தற்போது குடும்பத்துடன் வி.கைகாட்டி பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெமீன் சுத்தமல்லிக்கு சென்ற அவர், மாலையில் மீண்டும் வி.கைகாட்டி பகுதிக்கு மொபட்டில் வந்தார். சுந்தரேசபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ செல்வமுத்துக்குமரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து செல்வமுத்துக்குமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த பெரியநாகலூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்த முருகானந்தம் (37) என்பவரை கைது செய்தனர். மருத்துவமனையில் அவருக்கு நடத்திய சோதனையில் அவர் மது குடித்திருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story