மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 8:18 PM GMT (Updated: 20 Oct 2021 8:18 PM GMT)

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெருமாள் தீயனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெருமாள் தீயனூர் தெற்கு தெருவை சேர்ந்த நாராயணசாமி(வயது 45) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story