பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு


பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு  120 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 4:28 PM GMT (Updated: 21 Oct 2021 4:28 PM GMT)

பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு திருவண்ணாமலையில் 120துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு திருவண்ணாமலையில் 120துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வீரவணக்கம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு 120 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

மலர் வளையம் வைத்து அஞ்சலி

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளிஷ்வரன், மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Next Story