தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை


தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2021 5:42 PM GMT (Updated: 21 Oct 2021 5:42 PM GMT)

தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துெகாண்டார்.

காரைக்குடி, 
காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர் பல்கலைக்கழக பகுதியில் கேன்டீன் நடத்தி வருகிறார். வீட்டருகே மளிகை கடை நடத்தி வருகிறார். அதனை அவரது மனைவி கவனித்து வருகிறார். இவர்களது மகள் தேன்மொழி (வயது 16) அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சமீபத்தில் நடந்த கணக்கு தேர்வில் தேன்மொழி குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதனால் அவரது தந்தை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார். இதனால் தேன்மொழி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேன்மொழியின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story