மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2021 6:25 PM GMT (Updated: 21 Oct 2021 6:25 PM GMT)

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் பரளி, ராஜேந்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் 4 ரோடு, பூங்கா நகரில் உள்ள தனது மாமா மனோகர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புஞ்சை புகளூர் அலுவலகம் அருகே சென்றபோது, வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த ஜெயலாப்தீன் (53) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து, பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிரபு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மனோகர் கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story