நடந்து சென்ற வாலிபர் விபத்தில் சாவு


நடந்து சென்ற வாலிபர் விபத்தில் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2021 6:45 PM GMT (Updated: 21 Oct 2021 6:45 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்து சென்றபோது வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கு அருகே நூர்சாகிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முககுமார் (வயது 38). இவர் நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 
தகவலறிந்து வந்த போலீசார்அவரது உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story