மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2021 7:22 PM GMT (Updated: 22 Oct 2021 7:22 PM GMT)

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் இறந்ததாக தெரிகிறது.  இதுதொடர்பாக தகவல் கிடைத்தவுடன் நத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று கந்தசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கந்தசாமிக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

Next Story