கம்பைநல்லூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு


கம்பைநல்லூர் அருகே விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 22 Oct 2021 9:55 PM GMT (Updated: 22 Oct 2021 9:55 PM GMT)

கம்பைநல்லூர் அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.

மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள நவலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மொரப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது நவலை ஏரிக்கரை அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தமிழ் உயிரிழந்தார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story