விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலி


விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 23 Oct 2021 4:54 PM GMT (Updated: 23 Oct 2021 4:54 PM GMT)

விபத்தில் நிதி நிறுவன மேலாளர் பலி

காரைக்குடி
காரைக்குடி சுவாதி நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 52). இவர் திருமயத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காரைக்குடியில் இருந்து திருமயத்திக்கு தனது மனைவி சித்ராவோடு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆவுடைப்பொய்கை அருகே செல்லும்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டார். இதனால் தட்சிணாமூர்த்தியும், சித்ராவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே தட்சிணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story